ஆகாய தாமரை செடிகளை அகற்றப்படுமா?

Update: 2024-01-14 19:01 GMT

பாப்பாரப்பட்டி டவுன் பகுதியை ஒட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. அதன் பின்பு இந்த ஏரியில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் மீண்டும் ஆகாய தாமரை செடிகள் அடர்ந்து வளர தொடங்கியுள்ளன. இதனால் ஏரியில் மழைநீர் தேங்கும் பரப்பு குறைய தொடங்கியுள்ளது. எனவே ஏரியில் அடர்ந்து வளர்ந்து வரும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முனுசாமி, பாப்பாரப்பட்டி.

மேலும் செய்திகள்