குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2024-01-14 16:43 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் - காங்கயம் சாலை பழைய பஸ் நிலையத்திலிருந்து நல்லூர் வரை பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. காங்கயம் சாலை செயின்ட் ஜோசப் பள்ளி அருகில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரம் குளம் போல் தேங்கி நிற்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் வாகனங்களில் செல்லும்போது மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குடிநீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவது பொது மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மண்டல அதிகாரிகள் முக்கிய சாலைகளில் உள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும்.

=======

பாலசுப்பிரமணி,வீரபாண்டி.

98786 73638

மேலும் செய்திகள்