புதர் மண்டிய குடிநீர் தொட்டி

Update: 2023-12-31 16:35 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி-பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகிழ்வளவன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்