வீணாகும் குடிநீர்

Update: 2023-12-24 12:47 GMT

கூடலூர்-ஓவேலி சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான குழாய்கள் உடைந்து குடிநீர் தினமும் வெளியேறுகிறது. இதனால் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று நீண்ட காலம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் குடிநீர் வீணாகும் இடங்களில் லாரி டயர் டியூப்களை கட்டி வைத்துவிட்டு நகராட்சி ஊழியர்கள் செல்கின்றனர். இதனாலும் குடிநீர் வீணாவதை தடுக்க முடியவில்லை. எனவே குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்