மழைநீர் வடிகால் தேவை

Update: 2023-12-17 12:12 GMT

நாகை மாவட்டம் அதலையூர் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்புகளின் அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் நீரில் செடி,கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவை விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் நீரை அகற்றவும், மழைநீர் வடிகால் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்