குடிநீர் கிடைக்காமல் அவதி

Update: 2023-12-10 11:05 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே தேவன்-2 கிரவுன்ட் பாடி பகுதியில் சரிவர குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீருக்காக அவர்கள் நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. சிலர், விலைக்கு குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்