மழைநீர் வடிகால் தேவை

Update: 2023-12-03 10:08 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைவீதி மற்றும் முக்கிய சாலையோரங்களில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலையோரங்களில் நடந்து செல்கின்றனர். சாலை வளைவுகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்