வீணாகும் குடிநீா்

Update: 2023-11-05 18:00 GMT

சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் அருகே காங்கேயம்-முத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சாலையில் குழி ஏற்பட்டுள்ளதால் அதில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையில் ஏற்பட்டுள்ள குழியை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்