தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

Update: 2023-10-29 11:58 GMT

நாகை மாவட்டம் நாகூர் தர்கா அலங்கார வாசல் முன்பு மழைநீர் தேங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் தர்காவுக்கு வருபவர்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பலத்த மழையின் போது அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீர் வடிந்து செல்லவும், இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்