வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-10-29 11:55 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நாங்கூர் ஊராட்சி அலுவலகம் எதிரே நாலாயிரம் பிள்ளையார் கோவில் குளம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் தற்போது வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், வாய்க்காலுக்குள் மண் சரிந்து கிடக்கிறது. இதனால் குளத்துக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வாரி கரைகளை பலப்படுத்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்