குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-10-08 14:36 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் போலீஸ் நிலையம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஒரு வார காலமாக சர்ச் ரோடு நெடுஞ்சாலையில் வீணாகிறது. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்