குடிநீரில் கழிவுநீர் கலப்பு

Update: 2023-10-04 17:37 GMT
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிழக்குத்தெருவில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்