குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-10-01 16:54 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றம் அருகில் பண்டாரபுரம் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் போதிய குடிநீர் கிடைக்கப் பெறாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்