நடவடிக்கை தேவை

Update: 2023-09-27 16:58 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பட்டி காலனியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி அருகே பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணறு சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் கிணற்றின் அருகில் சிறுவர்கள் விளையாடுகின்றனர். எனவே கிணற்றை சுத்தப்படுத்தவும், கம்பி வேலி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்