வீணாகும் குடிநீர்

Update: 2023-09-27 09:05 GMT

பருத்திவிளை சந்திப்பில் இருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆடராவிளை குடிநீர் தொட்டிக்கு வடக்கு புறமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றுடன் இணைப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும் செய்திகள்