தூர்வாரப்படுமா?

Update: 2023-03-05 06:42 GMT

தூர்வாரப்படுமா?

தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீரகேரளம்பேரெரிக்குளம் உள்ளது. இந்த குளத்து நீர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஊர் மக்களுக்கும், பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது. தற்போது குளத்தின் அனைத்து படித்துறையிலும் ஆகாய தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஆகாயதாமரைகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜீவா, தாழக்குடி..

மேலும் செய்திகள்