தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் வைக்கப்படுமா?

Update: 2023-03-05 10:36 GMT

தற்போது கோடைக்காலம் ெதாடங்கி உள்ளது. இதனால் மக்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் தண்ணீா் குடிப்பதற்கு டம்ளர் இல்லை. இதனால் தண்ணீர் தொட்டி வைத்தும் எந்தப் பயனும் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிப்பதற்கு டம்ளர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

-வெண்பிரணவ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்