நீர்நிலைகள் மற்றும் நீர்வழிபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-23 10:54 GMT

கலசபாக்கம் அருகே கோயில்மாதிமங்கலம் ஏரிக்கோடி தண்ணீர் ஓடையின் வழியாக பானாம்பட்டு மதுரா, ஈச்சம்பூண்டி ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால், ஓடையின் பாதை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கோயில்மாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீர்நிலைகள் மற்றும் நீர்வழிபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ராஜா, கோயில்மாதிமங்கலம் 

மேலும் செய்திகள்