குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-06-29 13:03 GMT

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவது ஒரு மாதமாக பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தம் செய்திருந்தது. ஒரு மாதத்துக்கு பிறகு வார்டு எண்:1,4 கல்புதூர், செங்குட்டை பகுதிகளுக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை போதுமான அளவுக்கு குடிநீர் வராமல் உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் காசு கொடுத்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்