குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

Update: 2022-09-09 11:58 GMT

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் 4 தூண்களும் சேதமடைந்துள்ளன. தூண்களின் கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தத் தொட்டியை அகற்றி விட்டு கூடுதலாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆனந்தகுமார், பரவத்தூர். 

மேலும் செய்திகள்