குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-03-15 12:01 GMT

அரக்கோணம் - காஞ்சீபுரம் மெயின் ரோட்டில் தக்கோலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகில், கடந்த ஒரு மாதமாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. மேலும் சாலையோரம் தேங்கி நிற்கும் இந்த நீரில் வாகனங்கள் செல்லும்போது பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மீது சேற்றை வாரிஇறைக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்