திறந்த நிைலயில் ஆழ்துளை கிணறு

Update: 2022-10-05 11:03 GMT

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அணுக்குமலை ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னமேடு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆழ்துளை கிணறு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்த ெவளியில் உள்ளது. அதில் மழைப் பெய்தால் தண்ணீரும் மற்றும் பூச்சிகளும் உள்ளே சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க ேவண்டும்.க்ஷ

-ராமு, பொன்னமேடு.

மேலும் செய்திகள்