தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்

Update: 2022-11-23 14:18 GMT

திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் காலனி ராஜிவட்டம் பகுதியில் உள்ள நிலங்களில் பல ஏக்கரில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் ஊர்ந்து வீட்டுக்குள் வருகின்றன. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் கால்வாய் அமைத்துத்தர வேண்டும். இல்லையெனில், தற்காலிக நடவடிக்கையாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்.

-வக்கீல் கே.ஏ.குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்