திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை ஊராட்சி விநாயகர் கோவில் எதிரே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த தொட்டி சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மினி குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.