சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-08-23 11:57 GMT

நாகை மாவட்டம், தெற்கு பால்பண்ணைச்சேரி, நாடார் தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் சுத்தமின்றி வருகிறது. மேலும், கலங்களாக வருவது மட்டுமின்றி நுரையோடு வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்