பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-22 16:41 GMT
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தண்டாமரைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரியகுளத்தின் மூலம் நீர்பெறும் பாசனவாய்க்கால், வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பாசன வாய்க்கால் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக முறையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.  விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டும் நீர் வயல்களை வந்தடையாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன்கருதி பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்