திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி அண்ணா நகர், சேரன் நகர், பாரதி நகர், வைகோ நகர், திருமுருகன் நகர், சோழவந்தான் தோப்பு, காவேரி நகர், காமன் நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் கலங்கலாக வருகிறது. ஆகையால் ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.