ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சேரந்தை கிராமத்தில் உள்ள ஊருணியை பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் ஊருணி நீர் பகுதியை நாய்கள், பன்றிகள் அசுத்தம் செய்து விடுகின்றன. எனவே இந்த கண்மாயை சுற்றி கம்பிவேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.