திண்டுக்கல்-திருச்சி மத்திய பஸ் நிலையம் சாலை அரிஸ்டோ ரவுண்டானா அருகே சாலையின் அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக குடிநீர் வெளியேறி வீணாக்கி வருகிறது. மேலும் குடிநீர் வெளியேறும் இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.