ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர். நகர் 14-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இங்குள்ள நீர்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த நீர்தேக்க தோட்டியில் விரிசல்கள் ஏற்பட்டு தொட்டி இடியும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.