ராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதி சிகில் ராஜவீதி பெரிய பள்ளிவாசல் ஊருணியை இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தேவைக்களுக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஊருணியை ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.