சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

Update: 2022-08-17 15:31 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வார்டுகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தினசரி காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எப்பொழுது குடிநீர் வரும் என்று தெரியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய தண்ணீரின்றி மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே வழக்கம்போல் தினசரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்வதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்து குடிநீர் வினியோகிக்கப்படும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்