திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம்,தொப்பம்பட்டி கிராமம் ஆளிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.