குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

Update: 2022-08-17 11:58 GMT

கயத்தாறு பேரூராட்சியில் 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் இருந்து 3 மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இதனால் குடிநீர் மிகவும் கலங்கலாகவும், சுவையற்றதாகவும் உள்ளது. எனவே, நீர்த்தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்