திருச்சி, பொன்மலை கோட்டம் பீமநகர் முறுக்கு கார தெரு பண்டரிபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் உடைந்து பாதாள சாக்கடையில் குடிநீர் கலக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.