வீணாகும் குடிநீர்

Update: 2022-08-12 11:57 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்களாப்பள்ளியில் இருந்து திம்மம்பட்டி செல்லும் சாலையில் கணக்கப்பிள்ளையூர் பகுதியில் சாலையின் நடுவே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்