கலங்கலாக வரும் குடிநீர்

Update: 2022-08-11 12:45 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி சார்பில் குளித்தலை நகரப்பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் கலங்கிய நிலையில் வருகிறது. இந்த குடிநீரை பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தூய்மையான குடிநீர் வழங்க குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்