வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-11 11:43 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடத்தை அடுத்த வடரங்கத்தில் அரசடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக வாய்க்காலில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக வாய்க்காலில் நீரோட்டம் தடைபடுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்