கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சியில் உள்ள வெண்ணமலை, வெ.பசுபதிபாளையம், வங்கி காலனி பகுதிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு "ஜல்ஜீவன்" திட்டத்தின் கீழ் சுமார் 2000 வீடுகளுக்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் 10 நாட்களுக்கு ஒருமுறை மோட்டார் பழுது அல்லது குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வினியோகம் தடைபட்டு வருகிறது. தற்போதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.