விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள ஓடை தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் செல்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆதலால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை தூர்வாரி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.