குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-08-07 12:20 GMT
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்கு உட்பட்ட திருமுருகன் நகர், பாரதி நகர், நடராஜன் நகர், நிலா நகர், கலிங்கா நகர் போன்ற தெருக்களில் கடந்த ஒரு மாதமாக வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்