சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2022-08-07 09:41 GMT

நாகர்கோவில் செட்டிகுளம் ஐங்சனில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் குடிநீர் வீணாக பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். அத்துடன் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையோரம் நடந்து செல்கிறவர்கள் மீது தண்ணீர் தெறிப்பதால் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஐ்குமார், வெட்டூர்ணிமடம். 

மேலும் செய்திகள்