விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே உள்ள எட்திலப்பன்பட்டியில் அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் அருகே குடிநீர் நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை தாங்கும் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்தில் கல்வி படிக்கும் குழந்தைகள் அச்சம் அடைகின்றனர். எனவே குடிநீர்தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.