குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-08-03 10:05 GMT

திருப்பூர் மாநகராட்சி 40 -வது வார்டு கிழக்கு வண்டிகாடு இடுவம்பாளையம் பகுதியில் குழாய் உடைந்து 2 வாரமாக குடிநீர் வெளியேறி சாக்கடையில் வீணாக கலக்கின்றது. இதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. மக்களின் தாகம் தீர்க்க பல கிேலா மீட்டர் தொலைவில் இருந்து பணம் செலவு செய்து குடிநீர் கொண்டு வந்து இப்படி சாக்கடையில் கலக்க விடுவது நியாயமா? எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்