பழுதடைந்த குழாயில் வீணாகும் குடிநீர்

Update: 2022-08-02 13:41 GMT
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கெவிப்பாரா பகுதியில் ஓவேலி செல்லும் சாலையில்குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் விநியோகத்தின் போது குடிநீர் சாலையோரம் வீணாக வழிந்து ஓடுகிறது. இப்பிரச்சனையால் பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக கிடைப்பதில்லை. இதனால் பழுதடைந்த குழாய்களை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய குழாய்கள் பொருத்த வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சிவன், கூடலூர்.

மேலும் செய்திகள்