காட்சி பொருளான குடிநீர் தொட்டி

Update: 2022-08-01 11:40 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பேரூர் கிராமத்தில் மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த தெரு மக்கள், பக்கத்து தெருவிற்கு சென்று குடிநீர் பிடித்து வருகிறார்கள். ஆகவே காட்சி பொருளாக இருக்கும் மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்