சிவகாசி யூனியன் ஜமீன்சல்வார்பட்டியில் தண்ணீர் வசதிக்காக மின்மோட்டார் பொருத்தி தொட்டி மூலம் தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மின்மோடார் பழுதால் தண்ணீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் வசதி இன்றி தவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.