குளத்தை தூர் வார வேண்டும்

Update: 2022-07-30 13:56 GMT
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஊத்தாவெட்டி குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளை பெற்று வந்தனர். இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் ஆகாய தாமரைகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிகாணப்படுகிறது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் வீணாகிறது. இதன்காரணமாக குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூர வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்