கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புங்கோடை புகழூர் வாய்க்கால் அருகே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டு அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அதில் குடிநீர் நிரப்பப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் பழுதை நீக்குவதற்காக மின் மோட்டார் எடுத்துச்செல்லப்பட்டது. இருப்பினும் மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக குடிநீர் நிரப்பப்படாமல் இருந்ததால் நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.