குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-07-27 12:04 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வடக்கு மேடு பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பொது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பொதுகுடிநீர் தொட்டிக்கு வரும் தண்ணீரானது மின்மோட்டார் பழுது காரணமாக சரிவர வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

மேலும் செய்திகள்